தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 18, 2019, 12:16 PM IST

ETV Bharat / state

மூக்குத்தி தோடுகளுக்காக மூதாட்டி கொலை!

கடலூர்: பூஞ்சோலைக் குப்பம் கிராமத்தில், வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை அடையாளம் தெரியாத நபர்கள் கொலை செய்துவிட்டு, அவர் அணிந்திருந்த நகைகளை கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர்.

மூதாட்டி கொலை

கடலூர் மாவட்டம் கிளிஞ்சிக்குப்பம் அருகே உள்ள பூஞ்சோலை குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோகிலாம்பாள் (78). இவருக்கு நான்கு மகன்கள் இருந்தும், இவர் தனி வீட்டில்தான் வசித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அடையாளம் தெரியாத நபர்கள், முதாட்டி கோகிலாம்பாளை கொலை செய்துவிட்டு அவர் அணிந்திருந்த மூக்குத்தி, தோடு உள்ளிட்ட மூன்று பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

மூதாட்டி கொலை

இதனைத்தொடர்ந்து, நேற்று காலை கோகிலம்பாளின் மகன் தனது தாய்க்கு தேனீர் கொடுக்க அவரது வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது தாய் கொலை செய்யப்பட்டு இருப்பதையும், நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டிருப்பதையும் கண்டார்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் கோகிலாம்பாளின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details