கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் இன்று (டிச.31) செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசியதாவது: 2020ஆம் ஆண்டு ரவுடிகள் தொடர்பான கொலைச் சம்பவங்கள் ஏதும் நிகழவில்லை. இந்தாண்டில் 130 பேர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் சட்டம் ஒழுங்கு பிரச்னை சம்பந்தமாக 77 பேர், சொத்து அபகரிப்பு சம்பந்தமாக 18 பேர், சாராய கடத்தல் சம்பந்தமாக 29 பேர், திருட்டு வழக்கு சம்பந்தமாக 9 பேர் முறையே குண்டர் தடுப்பு சட்டத்தில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இது கடந்தாண்டை விட அதிகம்.
சொத்து குற்ற வழக்குகள் 86விழுக்காடு கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன. 310 வழக்கு பதியப்பட்டது, 267 வழக்கு துப்புதுலக்கப்பட்டுள்ளன.
50 கொலை வழக்குகள் பதியப்பட்டுள்ளன. 48 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சாலை விபத்துகளில் கடந்த 2019ஆம் ஆண்டை விட 2020ஆம் ஆண்டு 121 சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
விபத்து வழக்குகள்