கடலூர்: கடலூர் என்எல்சி தொழிற்சங்கத் தேர்தல் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். அதன்படி, இந்தாண்டு வரும் 25ஆம் தேதி தொழிற்சங்கத் தேர்தலை மத்திய தொழிலாளர் நலத்துறை ஆணையம் நடத்துகிறது. தேர்தலுக்கான வேட்புமனு கடந்த 5ஆம் தேதி தொடங்கி 15ஆம் தேதி பரிசீலனை முடிவடைந்தது. இத்தேர்தலில், தொழிலாளர் முன்னேர்ற சங்கம், சிஐடியு அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கம், பட்டாளி தொழிற்சங்கம் உள்ளிட்ட 7 தொழிற்சங்கங்கள் தேர்தலில் போட்டியிடுகின்றன.
தொழிலாளர் முன்னேற்ற சங்கத்திற்கு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, தமிழக வாழ்வுரிமை, மதிமுக ஆகியவை ஆதரவு அளித்துள்ளன. மற்ற தொழிற்சங்கங்கள் தனித்துப் போட்டியிடுகின்றன. 7,400 தொழிலாளர்கள் இதில் வாக்களிக்கவுள்ளனர். இதில், 51 விழுக்காடு வாக்குகள் பெறும் தொழிற்சங்கம் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கமாக அறிவிக்கப்படும். இச்சங்கம்தான் என்எல்சி நிர்வாகத்துடன் தொழிற்சங்கம் தொடர்பான பேச்சு வார்தைகளில் பங்களிக்க முடியும். 51 விழுக்காடு வாக்கு பெறாத நிலையில், அடுத்து வரும் தொழிற்சங்கமும் சேர்ந்து அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கமாக அறிவிக்கப்படும்.
கடந்த முறை அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கள்