தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசனம்: வெளியூர் பக்தர்களுக்கு அனுமதி? - devotee related news

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசனத்திற்கு பக்தர்களை அனுமதிப்பது குறித்து முடிவு எடுக்கப்படாமலேயே ஆட்சியர் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்தது.

ஆலோசனை கூட்டம்
ஆலோசனை கூட்டம்

By

Published : Dec 17, 2020, 8:39 PM IST

புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சனம், ஆருத்ரா திருவிழா இரண்டும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்தாண்டு கரோனா காரணமாக ஆருத்ரா தரிசனம் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது. இருப்பினும் பல பிரசித்திப் பெற்ற கோயில் வளாகத்தில் பக்தர்கள் இன்றி விழாக்கள் நடைபெற்று வந்தன.

அந்த வகையில், பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் திருவிழா நடத்துவது கூறித்து கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சகாமுரி தலைமையில் இன்று (டிசம்பர் 17) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில், நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள், சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலன், பொதுப்பணித்துறை, காவல் துறை, மருத்துவ துறை உள்ளிட்ட கடலூர் மாவட்ட உயரலுவலர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் தேர்த்திருவிழாவின்போது நடராஜர் தேர், சிவகாமசுந்தரி அம்மன் தேர் ஆகியவற்றை பக்தர்கள் இல்லாமல் இயந்திரங்கள் மூலம் இழுப்பது பற்றியும், தரிசன விழா அன்று காலையில் அபிஷேகம் நடக்கும்போது குறைவான பக்தர்கள் அனுமதிக்கலாமா என்பது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.

இது குறித்து கோயில் பொது தீட்சிதர்கள் கலந்தாலோசித்து கூறுவதாகத் தெரிவித்தனர். அவர்களின் பதிலையடுத்து பக்தர்கள் அனுமதி தொடர்பாக முடிவு எடுக்கப்படும் எனக் கூறி கூட்டம் முடிவுற்றது.

ஆருத்ரா தரிசனம் தேர் திருவிழாவிற்கு பக்தர்கள் அனுமதி தொடர்பாக இன்னமும் முடிவு எடுக்கப்படவில்லை. பொதுப்பணி, காவல், தீயணைப்பு உள்ளிட்ட துறைகள் மூலம் குழுக்கள் அமைக்கப்பட்டு பொறியாளர்களின் கருத்து கேட்டு முடிவு எடுக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் மாவட்ட தலைமையில் கூட்டம் நடைபெற்று அதற்கான உத்தரவு வெளியாகும் என தெரிகிறது.

இதையும் படிங்க: மோடியின் தாடிதான் வளர்கிறதே தவிர பொருளாதாரம் வளரவில்லை - ஈவிகேஎஸ் இளங்கோவன்!

ABOUT THE AUTHOR

...view details