தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 5, 2020, 1:31 PM IST

ETV Bharat / state

கடலூரில் மேலும் 68 பேருக்கு கரோனா!

கடலூர்: கோயம்பேட்டிலிருந்து கடலூர் திரும்பிய மேலும் 68 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் எம்.சி.சம்பத்
அமைச்சர் எம்.சி.சம்பத்

தமிழ்நாட்டில் கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதில், சென்னை மாநகராட்சி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டிலிருந்து தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்றவர்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கூறியதாவது;

"கோயம்பேட்டிலிருந்து கடலூர் திரும்பிய 810 பேருக்கு கரோனா பரிசோதனை செய்ததில் மொத்தம் 202 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் இன்று மட்டும் 68 பேருக்கு தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் கடலூரில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 228 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 217 பேரின் பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவேண்டியுள்ளன.

இவர்கள் அனைவரும் விருத்தாசலம், திட்டக்குடி, கடலூர் ஆகிய அரசு மருத்துவமனைகளில் தங்க வைத்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது" என தெரிவித்தார்.

இதையும் பார்க்க: பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கிய அமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details