கடலூர் சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத் கடலூர் கோட்டச்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெகதீஸ்வரனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய எம்.சி. சம்பத், “தமிழ்நாடு அரசு வலிமையான அரசு. மக்கள் நலன் காக்கும் அரசு.பெண்கள் மீது அக்கறை கொண்ட அரசு. அதிமுக அரசின் திட்டங்கள் அடித்தட்டு மக்களையும் சென்றடைந்துள்ளது.