கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியா முழுவதும் தேசிய ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என அரசு தெரிவித்துள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பூங்கா, பீச், திரையரங்கம், வழிபாட்டுத்தலங்கள் ஆகியவை மூடப்பட்டன.
இதனால் கோயிலில் நடைபெற்றுவந்த திருமணங்கள் ஊரடங்கும் முடியும்வரை நடைபெறாது என அந்தந்த கோயில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.