கடலூர் மாவட்டம், உழவர் சந்தையருகேயுள்ள போக்குவரத்துத்துறை அலுவலகம் முன்பு, போக்குவரத்து கிளை மேலாளரின் அரசு வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இன்று(மார்ச் 23) காலை திடீரென வாகனத்தை காணவில்லை. இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது திருடுபோன வாகனம் அவ்வழியாக வந்ததைக் கண்ட காவல் துறையினர், தடுத்து நிறுத்தி, வாகனத்தை திருடிச் சென்றவரைக் கைது செய்தனர். பின் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். அவ்விசாரணையின்போது, வாகனத்தை திருடிச் சென்றவர் குறிஞ்சிப்பாடி பகுதியைச் சேர்ந்த மணிவேல் என்றும்; இவர் தனியார் பேருந்து நடத்துநராக இருந்ததும் தெரியவந்தது.