தமிழ்நாடு

tamil nadu

ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை!

By

Published : Dec 28, 2020, 5:15 PM IST

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு கடலூர் மாவட்டத்திற்கு வரும் 30ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சாகமூறி உத்தரவு

சிதம்பரம் நடராஜர் கோவில்
சிதம்பரம் நடராஜர் கோவில்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா திருவிழா வரும் 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முக்கிய திருவிழாவான தேர் திருவிழா வரும் 29ஆம் தேதியும் ஆருத்ரா தரிசன விழா 30ஆம் தேதியும் நடைபெற உள்ளது.

இவ்விழாவை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சாகமூறி வரும் 30ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து, இந்த விடுமுறை நாளை ஈடுசெய்ய 23.01.2021 அன்று பணி நாளாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என அறிவித்தார்.

மேலும் இந்நாட்களில் சிதம்பரம் நகரில் இயங்கிவரும் 3 மதுபானக் கடைகளையும் மூட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:’பொதுத்தேர்வு நிச்சயம் நடைபெறும்’ - அமைச்சர் செங்கோட்டையன் உறுதி!

ABOUT THE AUTHOR

...view details