கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழ்நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் வெளிமாநில வாகனங்கள் தமிழ்நாட்டிற்கு உள்ளே வரும்போது அந்த வாகனங்களின் மீது கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, பின்னர் அனுமதிக்கப்பட்டுவருகின்றனர்.
இதனையடுத்து தமிழ்நாடு எல்லை பகுதியான கடலூர் பெரிய கங்கணங்குப்பம் பகுதியில் காவல் துறையினர் சோதனைச் சாவடி அமைத்துள்ளனர். இந்த சோதனைச்சாவடி வழியாக பெரும்பாலான வெளிமாநில வாகனங்கள் கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு வந்து செல்கின்றனர்.
இதனால் அந்தச் சோதனை சாவடியில் வழியாக செல்லக்கூடிய வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டுவருகிறது.