தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கடலூரில் பைக், லாரி மோதி விபத்து: 2 இளைஞர்கள் உயிரிழப்பு! - கடலூரில் பைக், லாரி மோதி விபத்து

கடலூர்: இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் மீது, மினி லாரி மோதி சம்பவ இடத்தில் இரண்டு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கடலூரில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் மீது மீன் லாரி மோதி சம்பவ இடத்தில் இரண்டு இளைஞர்கள் பலி
கடலூரில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் மீது மீன் லாரி மோதி சம்பவ இடத்தில் இரண்டு இளைஞர்கள் பலி

By

Published : Jan 15, 2021, 11:45 AM IST

புதுவை மாநிலம், நரம்பை பகுதியைச் சேர்ந்த ஆனந்த், மூர்த்திக்குப்பம் மீனவப் பகுதியைச் சேர்ந்த கணேஷின் நண்பர்கள் ஆகியோர், புதுச்சேரியிலிருந்து கடலுக்குத் தனது நண்பர்களைப் பார்க்க இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர்.

அப்போது, கடலூர் பெண்ணையாறு பாலத்தின் மீது வேகமாக வந்தபோது, கடலூர் துறைமுகப் பகுதியிலிருந்து மீன் ஏற்றிக்கொண்டு பாண்டிச்சேரிக்கு சென்ற மீன் வண்டியின் மீது நேருக்கு நேர் மோதியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே ஆனந்த், கணேஷ் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சம்பவம் பற்றி தகவலறிந்த ரெட்டிச்சாவடி காவல் துறையினர் அவர்களது உடலை மீட்டு, கடலூர் தலைமை அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க...சிருங்கேரி கோயிலுக்கு வந்த தலைமை நீதிபதி பாப்டே!

ABOUT THE AUTHOR

...view details