கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயில் உலகப்புகழ் பெற்றது. இந்த கோயிலை திட்சிதர்கள் நிர்வகித்து வருகின்றனர். இந்த கோயிலில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் எழுந்த நிலையில், அறநிலையத்துறை சார்பாக 5 பேர் கொண்ட குழு, ஆய்வு மேற்கொள்ள கோயிலுக்கு சென்றது.
இதற்கு தீட்சிதர்கள் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் குழுவினர் திரும்பிச் சென்றனர். இதேபோல 2ஆவது நாளாக ஆய்வுக்கு சென்றபோதும் வரவு, செலவு கணக்குகளை காண்பிக்காமல், செயல் அலுவலகத்தை மூடிவிட்டு சென்றுள்ளனர். இதுகுறித்து, அறநிலையத்துறை ஆணையர் சுகுமாரன், "இரண்டு முறை, சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு ஆய்வு மேற்கொள்ள சென்றோம்.