தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிதம்பரம் நடராஜர் சன்னதியை சூழ்ந்த மழைநீர் - புரெவி புயல்

சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் தண்ணீர் வடிய வழி இல்லாததால், கோயிலில் உள்ள அனைத்து சன்னதிகளிலும் மழைநீர் சூழ்ந்துள்ளது.

Heavy rain in Cuddalore: Rain water around Chidambaram Natarajar temple
Heavy rain in Cuddalore: Rain water around Chidambaram Natarajar temple

By

Published : Dec 4, 2020, 2:33 PM IST

கடலூர்: வங்கக்கடலில் உருவாகிய புரெவி புயல் இலங்கையின் திரிகோண மலையிலிருந்து ராமேஸ்வரத்திலுள்ள பாம்பனைக் கடந்து பின் கேரள கடல் பகுதிக்குச் செல்லும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆனால், புயலானது மன்னார் வளைகுடா அருகே ராமநாதபுரத்தில் வலுகுறைந்து தங்கியுள்ளது. இதன் காரணமாக ராமநாதபுரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. இதனால் மக்கள் பலரும் தங்களது இயல்பு வாழ்க்கையைத் தொடர முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நிரம்பி வழியும் சிதம்பரம் நடராஜர் கோயிலின் குளம்

இந்நிலையில், புரெவி புயல் காரணமாக கடலூரில் பெய்த கனமழையால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. தாழ்வான பகுதிகள் அனைத்தும் குளம்போல காட்சி தருகின்றன.

கோயிலுக்குள் இடுப்பளவு தண்ணீரில் நிற்கும் பக்தர்

இதற்கிடையில், கடலூரில் பிரசித்திப் பெற்ற சிதம்பரம் நடராஜர் ஆலையத்தில் அனைத்து சன்னதிகளிலும் மழைநீர் இடுப்பளவிற்கு மேல் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

மேலும், கோயில் குளமான சிவகங்கை குளமும் நிரம்பி வழிகிறது. கோயில் வளாகப் பகுதிகளும் வெள்ளநீரில் சூழ்ந்து காட்சி தருகின்றன.

மழைநீரில் மூழ்கியுள்ள சன்னதிகள்

இதையும் படிங்க: புரெவி: திருவனந்தபுரம் விமான நிலைய சேவை நிறுத்தம்!

ABOUT THE AUTHOR

...view details