கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழ்நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய தேவையைத் தவிர யாரும் வெளியே வர வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் உத்தரவிடப்பட்டது.
ஆனாலும் அரசு அறிவிப்பை மீறி பெரும்பாலானோர் வெளியே சுற்றுவதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் மூன்று வண்ண அடையாள அட்டை வழங்கப்பட்டது. இந்த அட்டைப்படி ஒரு நாளைக்கு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே ஒரு முறை அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்கு வெளியே வர அனுமதிக்கப்படுவர்.
இந்நிலையில் கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் நகராட்சி ஆணையர் பிரபாகரன் தலைமையில் நான்கு குழுக்கள் அமைக்கப்பட்டு வண்ண அடையாள அட்டை வழங்கப்பட்டது.