கடலூர் மாவட்டம் வடலூர் பேருந்து நிலையம் அருகே உள்ள பேரூராட்சி அலுவலகத்தில் நிர்வாக செயல் அலுவலராக சக்கரவர்த்தி (55) என்பவர் பணியாற்றி வருகிறார். மேலும் குறிஞ்சிப்பாடி பேரூராட்சி அலுவலகத்தையும் சேர்த்து இவர் கவனித்து வருகிறார். இந்நிலையில் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள தானூர் கிராமத்தைச் சேர்ந்த மோகன்தாஸ் என்பவர் தனது உறவினர் வெளிநாட்டிலிருந்து அனுப்பிய பணத்தை வைத்து வடலூர் பகுதியில் 25 சென்ட் நிலத்தை வாங்கியுள்ளார்.
அந்த நிலத்தை மறுசீரமைப்பு செய்வதற்காக வடலூர் பேரூராட்சி நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். அப்போது நிர்வாக செயல் அலுவலராக இருந்த சக்கரவர்த்தி ரூ. 25 ஆயிரம் கொடுத்தால்தான் நிலம் மறுசீரமைப்பு செய்து தரப்படும் என்று கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து, மோகன்தாஸ் வீட்டில் இருக்கும் பணத்தை எடுத்து வருவதாக சக்கரவர்த்தியிடம் கூறிவிட்டு, இது குறித்து கடலூர் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.