கடலூர்:தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுற்ற நிலையில் இன்று வாக்குகள் எண்ணப்படுகின்றன. னைத்து மையங்களிலும் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் முன்னணி மற்றும் முடிவுகள் வெளியாகி வருகிறது.
இந்நிலையில், கடலூர் மாநகராட்சி புனித வளனார் பள்ளி மையத்தில் மின்னனு இயந்திரம் வைக்கப்பட்ட அறையின் சாவி தொலைந்துவிட்டது. இதனால் அலுவலர்கள் மற்றும் வேட்பாளர்கள் வீதியில் நின்று கொண்டிருக்கின்றனர். சாவி கிடைக்காததால் வாக்கு எண்ணுவது தாமதம் ஆனது. அதிகாரிகள் சாவியை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.