கடலூர், சிப்காட் பகுதியில் ’கிரிம்சன் ஆர்கானிக்’ என்ற தனியார் பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்தத் தொழிற்சாலையில் இன்று (மே.13) காலை கொதிகலனில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
இதில் பழைய வண்டி பாளையத்தைச் சேர்ந்த ராஜ்குமார், செம்மங்குப்பம் பகுதியைச் சேர்ந்த கணபதி, காரைக்கால் பகுதியைச் சேர்ந்த சபிதா, பரங்கிப்பேட்டையைச் சேர்ந்த விஷேஸ் ராஜ், ஆகிய நான்கு பேர் உயிரிழந்தனர். மேலும் 17 பேர் காயமடைந்து கடலூர் தலைமை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.