கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சுப்புராயலு நகர், பூந்தோட்ட சாலையை சேர்ந்தவர் வீரா என்கிற வீரங்கன் (35). பிரபல ரவுடியான இவரை, கடந்த 16ஆம் தேதி இரவு ஒரு கும்பல் முன்விரோதம் காரணமாக அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர்.
இந்த கொலை வழக்கில், மார்கெட் காலனியைச் சேர்ந்த அருண்பாண்டியன் (27), குப்பன் குளத்தைச் சேர்ந்த சுதாகர் (23), சுவாமிநாதன் (30), ஸ்டீபன் (எ)ஸ்டீபன்ராஜ், ஜீவா (எ) ஜீவானந்தம், விக்கி (எ) விக்ரம், ராக்கி, ரமணன், ராஜசேகர் ஆகியோரை கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளி A1 கிருஷ்ணன் காவல்துறையினர் எண்கவுன்டரில் இறந்தார்.