தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அலட்சியமாக ஊசி செலுத்திய செவிலியர்... சமூக வலைதளத்தில் வைரலான புகைப்படம்! - cuddalore district news

காதில் செல்போனை வைத்துக்கொண்டு அலட்சியமாக ஊசி செலுத்தும் விருத்தாசலம் அரசு மருத்துவமனை செவிலியரின் புகைப்படம், சமூக வலைதளத்தில் விவாதங்களைக் கிளப்பியுள்ளது.

Cuddalore Nurse inadvertently injected
Cuddalore Nurse inadvertently injected

By

Published : Aug 14, 2021, 7:52 AM IST

கடலூர்: விருத்தாசலத்தை சுற்றியுள்ள மங்கலம்பேட்டை, கம்மாபுரம், பெண்ணாடம், வேப்பூர், தொழுதூர், திட்டக்குடி, ஸ்ரீமுஷ்ணம் உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து தினமும் 1000த்திற்க்கும் மேற்பட்ட நோயாளிகள் விருதாச்சலம் அரசு மருத்துவமனைக்கு வந்து, உள், வெளி நோயாளிகளாக சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதில் 90 விழுக்காடு நபர்கள் கிராமத்திலிருந்து வரும் ஏழை, எளிய நோயாளிகளாக உள்ளனர். இதனால் சிகிச்சைக்கு வரும் கிராமத்து மக்களிடம், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் அணுகும் முறை அவ்வப்போது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

அலட்சியமாக ஊசி செலுத்திய செவிலியர்

இந்நிலையில், நேற்று முன்தினம் (ஆக.12) இரவு தொரவலூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜவேல் மகன் ஜெயசீலன் என்பவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்தபோது, மருத்துவர் கூறியதன் பேரில் செவிலியர் ரேவதி, ஜெயசீலனுக்கு இடுப்பில் ஊசி செலுத்தியுள்ளார்.

அப்போது, ரேவதி செல்போன் பேசிகொண்டே ஊசியை செலுத்தியுள்ளார். இதனை நோயாளியின் உறவினர்கள் தட்டிக்கேட்டபோது ரேவதி தரக்குறைவாக பேசியதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து இதனை நோயாளியின் உறவினர்கள் தங்களது செல்போனின் காணொலியாக எடுத்துள்ளனர்.

தொடர்ந்து செவிலியர் ரேவதிக்கும், நோயாளியின் உறவினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு வந்த மற்ற ஊழியர்கள் அவரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில், செவிலியர் ரேவதி ஊசி போடும் புகைப்படம் சமூக வலைதளத்தில் பகிரபட்டு தற்போது விவாதிக்கப்பட்டு ஏற்படுத்தியுள்ளது.

நோயாளிகள் கோரிக்கை

இந்நிலையில், இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் நடைபெற்று வருவதாகவும், அதனால் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்கள், பணியாளர்களுக்கு நோயாளிகளிடம் நடந்து கொள்ளும் முறைகள் குறித்து கவுன்சிலிங் கொடுக்க வேண்டும் எனவும் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செவிலியர் ரேவதி மீது துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்போவதாகவும் அரசு மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க : முகக்கவசம் அணிவோரின் எண்ணிக்கை மிகக் குறைவு - ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

ABOUT THE AUTHOR

...view details