ஊரடங்கு உத்தரவின் காரணமாக அனைத்து திருமண நிகழ்ச்சிகளும் தடை செய்யப்பட்டுள்ளதால் திருமணத்தை சார்ந்துள்ள அனைத்து தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதித்துள்ளது.
இந்நிலையில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தென்னிந்திய திருமண அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலச்சங்கத்தைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில், “வரன் பார்த்து திருமணம் நடத்தும் திருமண அமைப்பாளர்கள் தமிழ்நாட்டில் சுமார் 5 லட்சம் பேர் உள்ளனர். இந்த ஊரடங்கு உத்தரவால் திருமணம், ஜாதகம் என எதற்கும் வெளியே செல்லாமல் வீட்டிலேயே முடங்கி இருப்பதால் மிகவும் சிரமப்படுகின்றோம்.