தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கடலூரில் மின்கம்பியை மிதித்து விவசாயி உயிரிழப்பு! - Farmer dead due to trampling power wire

கடலூர்: சித்தரசூர் அருகே விளைநிலத்தில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து விவசாயி உயிரிழந்தார்.

Cuddalore Farmer dead due to trampling power wire
கடலூரில் மின்கம்பியை மிதித்து விவசாயி உயிரிழப்பு!

By

Published : Nov 28, 2019, 6:24 PM IST

கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே உள்ள சித்தரசூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி அமலநாதன் (60) இன்று விளை நிலத்திற்கு சென்றுள்ளார்.

அப்போது பலத்த காற்று, மழையின் காரணமாக மின் கம்பி அறுந்து கீழே விழுந்துள்ளது. இதனை கவனிக்காத அமலநாதன் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்துள்ளார். இதனால் அவர் உடலில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அப்போது அவ்வழியாக சென்ற பொதுமக்கள் நெல்லிக்குப்பம் காவல்நிலைத்திற்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், அமலநாதன் உடலை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாவிற்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து நெல்லிக்குப்பம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க...மாணவர்களுக்கு தினமும் உடற்கல்வி - பள்ளிக்கல்வித்துறை அறிவுரை

ABOUT THE AUTHOR

...view details