தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வீட்டில் மரணம்! - cuddalore crime news

கடலூர்: மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வீட்டில் ஜெயமணி என்பவர் மரணமடைந்தது தொடர்பாக காவல் துறையினர் விசாரித்துவருகின்றனர்.

கடலூர்
கடலூர்

By

Published : Jan 23, 2020, 3:53 PM IST

கடலூர் மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் சண்முகநாதன். இவருக்கு நிஷா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்த சூழலில், நெய்வேலி தெற்கு தெருவைச் சேர்ந்த ஜெயமணி என்பவர்

நேற்று மதியம் சண்முகநாதனின் மனைவி நிஷாவை சந்திப்பதற்காக அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். பின்பு அவர் மர்மமான முறையில் சண்முகநாதன் வீட்டில் இறந்துகிடந்தார். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த நெய்வேலி காவல் துறையினர் ஜெயமணி உடலை மீட்டு என்எல்சி பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வீட்டில் மரணம்

தொடர்ந்து, ஜெயமணியின் மனைவியும் அவரது உறவினர்களும் சண்முகநாதன் வீட்டின் முன்பு குவிந்தனர். சண்முகநாதன் மற்றும் அவரது மனைவி நிஷாவிடம் இதுதொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். மேலும் ஜெயமணியின் உடலை உடற்கூறாய்வு செய்த பிறகே மரணத்திற்கான காரணம் தெரியவரும் என்றும் காவல் துறையினர் தெரிவித்தனர் .

இதையும் படிங்க: திருமணமாகாத விரக்தியில் கட்டிட தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details