தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கடலூரில் மேலும் 339 பேருக்கு கரோனா - கடலூர் மாவட்ட செய்திகள்

கடலூர் : இன்று ஒரே நாளில் 339 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஐந்தாயிரத்து 686ஆக உயர்ந்துள்ளது.

Cuddalore Corona Update
Cuddalore Corona Update

By

Published : Aug 12, 2020, 8:51 PM IST

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா, தமிழ்நாட்டையும் தலைகீழாக புரட்டிப்போட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அந்த வகையில், கடலூர் மாவட்டத்தில் நேற்று (ஆக. 11) வரை கரோனா தொற்றால் ஐந்தாயிரத்து 347 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (ஆக. 12) மேலும் 339 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஐந்தாயிரத்து 686ஆக உயர்ந்துள்ளது. இரண்டாயிரத்து 343 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கடலூர், விருத்தாச்சலம், சிதம்பரம் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

நேற்று வரை அம்மாவட்டத்தில் இரண்டாயிரத்து 893 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், இன்று (ஆக. 12) மேலும் 202 பேர் சிகிச்சைப் பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அம்மாவட்டத்தில் இதுவரை சிகிச்சைப் பலனின்றி 70 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இன்று மேலும் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details