தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 16, 2020, 9:10 PM IST

ETV Bharat / state

கடலூரில் மேலும் 185 பேருக்கு கரோனா

கடலூர் : மேலும் 185 பேருக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆறாயிரத்து 691ஆக உயர்ந்துள்ளது.

corona positive cases
corona positive cases

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றின் தாக்கம் தமிழ்நாட்டில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த வகையில், கடலூர் மாவட்டம் முழுவதும் போர்க்கால அடிப்படையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் வெளி மாவட்டம், மாநிலங்களில் இருந்து வருபவர்கள் தாமாகவே முன்வந்து மருத்துவப் பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும். மருத்துவம் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடலூரில் நேற்று வரை கரோனா தொற்றால் ஆறாயிரத்து 506 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (ஆக. 16) மேலும் 185 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆறாயிரத்து 691ஆக உயர்ந்துள்ளது. மேலும் இரண்டாயிரத்து 498 பேர் தனிமைப்படுத்தப்பட்டு, கடலூர், விருத்தாசலம், சிதம்பரம் உள்ளிட்ட அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் கடலூர் மாவட்டத்தில் நேற்று வரை மூன்றாயிரத்து 716 பேர் வீடு திரும்பியுள்ள நிலையில் இன்று மேலும் 157 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் கடலூர் மாவட்டத்தில் சிகிச்சை முடிந்து குணமடைந்தவரின் எண்ணிக்கை மூன்றாயிரத்து 873ஆக உயர்ந்துள்ளது.

அம்மாவட்டத்தில் நேற்று வரை 79 பேர் உயிரிழந்த நிலையில் இன்று மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details