தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு! - Cuddalore District Collector v. Anbuselvan

கடலூர்: அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மாவட்ட ஆட்சியர் கதிரவன் ஆய்வு மேற்கொண்டார்.

மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன்  கடலூர் மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன்  ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு  Collector v. Anbuselvan  Cuddalore District Collector v. Anbuselvan  Collector Inspection of primary health centers
Cuddalore District Collector v. Anbuselvan

By

Published : Apr 24, 2020, 11:46 AM IST

கடலூர் மாவட்டம், குள்ளஞ்சாவடி, வடலூர், கெங்கைகொண்டான், அரசக்குழி, மங்களம்பேட்டை, இருப்பு, மருங்கூர் ஆகிய பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், குறிஞ்சிப்பாடி, விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைகள், விருத்தாச்சலம் ஒழுங்குமுறை விற்பனை கூடம், குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.

அப்போது, அவர் கூறுகையில், "கடலூர் மாவட்டத்தில் வருவாய்த்துறை, மருத்துவத் துறை, காவல் துறை, ஊரக வளர்ச்சித் துறை சார்பில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள குள்ளஞ்சாவடி, வடலூர், கெங்கைகொண்டான், அரசக்குழி, மங்களம்பேட்டை மருங்கூர் ஆகிய மருத்துவமனைகளில் பொதுமக்கள் எந்த காரணத்திற்காக மருத்துவமனைக்கு வருகிறார்கள் என்பதையும், பொதுமக்கள் காய்ச்சல், சளி போன்ற காரணத்திற்காக வரும்பட்சத்தில் அவர்களுடைய குடும்பத்தாருக்கும் பரிசோதனை செய்ய மருத்துவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பொதுமக்கள் செல்லும்போது காய்ச்சல், சளி போன்ற அறிகுறி இருந்தால் மருத்துவர்கள், செவிலியர்கள், துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) ஆகியோருக்கு நாள்தோறும் தகவல் தெரிவிக்க வேண்டும். நகர் மற்றும் கிராமப்புறங்களில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் செயல்பட வேண்டும் என மருத்துவர்கள், செவிலியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மாவட்டத்திலுள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் அனைத்துப் பகுதிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, அனைத்துப் பகுதிகளிலும் தொற்று பரவாமல் இருக்க வீடு வீடாக ஆய்வு செய்யப்படுகிறது. கிருமி நாசினி, பிளீச்சிங் பவுடர் அனைத்துப் பகுதிகளிலும் தெளிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். முகக்கவசம் இல்லாமல் வெளியே வரும் நபர்களுக்கு ரூபாய் 100 அபராதம் விதிக்கப்படும். அனைத்து நகராட்சிப் பகுதிகளிலும் பொதுமக்கள் வெளியே வருவதற்கு அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டு வருகிறது.

ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆய்வு செய்யும் மாவட்ட ஆட்சியர்

இந்த நடைமுறை அமலில் இருக்கும். மேலும் நடமாடும் காய்கறிகள், மளிகைப் பொருள்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அவரவர் வீட்டிற்கே வழங்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வருவாய்த்துறை, காவல் துறை, மருத்துவத் துறை, அரசு ஊழியர்கள் அனைவரும் தங்கள் பணியை முழு ஈடுபாட்டுடன் செய்து வருகிறார்கள்.

பொதுமக்கள் அனைவரும் தகுந்த இடைவெளியை பின்பற்ற வேண்டும். அத்தியாவசியப் பொருள்கள் தங்கு தடையின்றி கிடைக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளித்திட வேண்டும். மேலும் மாவட்ட ஆட்சியரகத்தில் இயங்கும் மருத்துவ கட்டுப்பாட்டு அறை 1077 என்ற இலவச கட்டணமில்லா தொலைபேசி எண்ணினை தொடர்பு கொண்டு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்" எனத் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது, விருத்தாச்சலம் சார் ஆட்சியர் பிரவின்குமார், தனித்துணை ஆட்சியர் பரிமளம், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) ராஜா, கடலூர் வட்டாட்சியர் செல்வகுமார், குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் கீதா, விருத்தாசலம் வட்டாட்சியர் கவியரசு, பண்ருட்டி வட்டாட்சியர் உதயகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க:சேலத்தில் குணமடைந்து வீடு திரும்பிய கரோனா நோயாளிகள்!

ABOUT THE AUTHOR

...view details