கடலூர்: உலகப்புகழ் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித்திருமஞ்சன விழா ஜூலை 6ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தேரோட்டம் ரத்து
இத்திருவிழாவின் ஒரு பகுதியான ஆனி திருமஞ்சன தேரோட்டம் மிகவும் பிரசித்திப் பெற்றது. கரோனா தொற்று காரணமாக தமிழ்நாடு அரசு தேர்த் திருவிழாவிற்கு அனுமதி அளிக்கவில்லை.
இந்நிலையில் இன்று கோயிலில் நடராஜர், சிவகாமி சுந்தரி சிலைக்குச் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்செய்தனர்.