கடலூர்: சிதம்பரம் வடக்கு வீதியை சேர்ந்தவர் தீட்சிதர் சோமசேகர். இவர் தன்னுடைய 14 வயது மகளை, தற்போது 10-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை கடந்த ஆண்டு , அதே பகுதியை சேர்ந்த சக தீட்சியரின் 24 வயது மகனுக்கு குழந்தை திருமணம் செய்து வைத்ததாக புகார் எழுந்தது.
இந்நிலையில் திருமணமான சிறுமி மற்றும் அவரது தந்தையை விசாரணைக்காக கடலூர் மாவட்ட டெல்டா பிரிவு போலீசார் அழைத்து வந்தனர்.
அந்த சிறுமியை கடலூர் மாவட்ட சமூக நல அலுவலர் சித்ரா விசாரணை நடத்தினார். அப்போது சிறுமி தனக்கு திருமணம் நடந்ததை ஒப்புக் கொண்டார்.