சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் மற்றும் டிப்ளமோ பாடப்பிரிவின் கீழ் படிக்கும் மாணவர்கள் சுமார் 30 பேருக்கு நடப்பு பருவத்திற்கான தேர்வு எழுத நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை.
வருகைப்பதிவு குறைவாக இருப்பதாகக் கூறி இவர்களுக்கான தேர்வு அனுமதிச் சீட்டு வழங்கப்படவில்லை. இதனால் மாணவர்கள் தேர்வு எழுத முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மாணவர்கள் பொறியியல் கல்லூரி முதல்வர், துறைத்தலைவர் மற்றும் பல்கலைக்கழக பதிவாளர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளிடம் முறையிட்டும் மாணவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.