தமிழ்நாடு

tamil nadu

என்எல்சியில் பாய்லர் வெடித்த விபத்து - மேலும் ஒருவர் உயிரிழப்பு

By

Published : May 19, 2020, 10:20 AM IST

கடலூர்:என்எல்சியில் பாய்லர் வெடித்த விபத்தில் ஏற்கனவே நான்கு தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மேலும் ஒரு தொழிலாளி இன்று உயிரிழந்தார்.

died
died

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி.யின் 2ஆவது அனல்மின் நிலையத்தில் கடந்த 7ஆம் தேதி பாய்லர் வெடித்தது. இந்த தீ விபத்தில் எட்டு பேர் காயமடைந்தனர்.

இதில் சர்புதீன், சண்முகம், பாவாடை, பாலமுருகன் ஆகிய தொழிலாளிகள் உயிரிழந்த நிலையில், திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த ஒப்பந்தத் தொழிலாளியான அன்புராஜா (47) என்பவர் சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்தார்.

ஏற்கனவே நான்கு தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில், இன்று மேலும் ஒருவர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க:நெய்வேலி என்எல்சியில் பாய்லர் வெடித்து விபத்து!

ABOUT THE AUTHOR

...view details