தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 17, 2021, 9:05 PM IST

ETV Bharat / state

மின்சாரம் தாக்கி வங்கி ஊழியர் உள்பட இருவர் உயிரிழப்பு

கடலூர்: காட்டுமன்னார்கோவில் அருகே மின்சாரம் தாக்கி வங்கி ஊழியரும், அவரை காப்பாற்றச் சென்றவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

bank-employee-electrocuted-in-cuddalore
bank-employee-electrocuted-in-cuddalore

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே புத்தூர் உட்பட்ட பெருங்களூர் கிராமத்தில் வசித்து வந்துள்ளார் சத்தியசீலன். சென்னையில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றிவரும் சத்தியசீலன், தன் வீட்டில் உள்ள தொலைக்காட்சி பெட்டியை ஆன் செய்ய முற்பட்டபோது, கூரை வீட்டில் மின் இணைப்பிற்கு வரும் கம்பியை எதிர்பாராத விதமாக தொட்டுள்ளார். இதன் காரணமாக திடீரென அவரை மின்சாரம் தாக்கியது.

இதனை பார்த்த பக்கத்து வீட்டுக்காரரான பாலுசாமி (50 வயது) சத்தியசீலனை காப்பாற்ற சென்றார். அப்போது அவரையும் மின்சாரம் தாக்கியது. இருவரையும் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது வழியிலேயே இறந்ததாகக் கூறியுள்ளனர். இதனால் உறவினர்கள் வழக்கு ஏதும் பதிவு செய்யாமல் அவர்களின் உடலை வீட்டிற்குச் எடுத்துச் சென்றனர். சத்தியசீலன் இன்று (ஜன. 17) சென்னைக்கு புறப்பட இருந்த நிலையில், மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க.... மின்சாரம் தாக்கி அண்ணன், தங்கை உயிரிழப்பு!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details