தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 8, 2020, 11:18 AM IST

ETV Bharat / state

கடலூரில் கரோனாவிலிருந்து குணமடைந்த 930 பேர் டிஸ்சார்ஜ்!

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்து 930 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

corona
corona

தமிழ்நாட்டில் நேற்று (ஜூலை 7) ஒரே நாளில் 3,616 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 594ஆக உயர்ந்துள்ளது.

கடலூரில் நேற்று வரை கரோனா தொற்றால் 1,315 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 64 பேருக்கு கரோனா தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,379ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட அனைவரும் கடலூர், விருத்தாச்சலம், சிதம்பரம் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அரசு மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கு சத்தான உணவுகள் வழங்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் கடலூர் மாவட்டத்தில் நேற்று வரை 894 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், இன்று (ஜூலை 18) மேலும் 36 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் கடலூர் மாவட்டத்தில் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 930ஆக உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க:கரோனா நோயாளிகள் மன உளைச்சலில் இருந்து மீள தொலைக்காட்சி வசதி

ABOUT THE AUTHOR

...view details