தமிழ்நாடு

tamil nadu

கடலூர் கரோனா வார்டில் 8 பேர் அனுமதி!

By

Published : Mar 31, 2020, 10:31 PM IST

கடலூர்: டெல்லி மாநாட்டிற்குச் சென்று வந்த 8 பேர் அரசு தலைமை மருத்துவமனையின் சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

dsd
sds

கரோனா வைரஸ் தாக்கம் தமிழ்நாட்டில் அதிகரித்த வண்ணம் உள்ளது. கரோனா இருக்கலாம் எனச் சந்தேகித்த நபர்கள் அனைவரும் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்நிலையில், டெல்லிக்கு மாநாட்டில் கரோனா வைரஸ் பரவுயுள்ளது உறுதியானதையடுத்து, அதில் பங்கேற்ற நபர்கள் அனைவரையும் கண்டறியும் பணி நடைபெற்றுவருகிறது. அந்த வகையில்,டெல்லி மாநாட்டிற்கு கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த 8 நபர்கள் கடந்த மாதம் சென்றுவந்துள்ளது தெரியவந்தது.

கடலூர் கரோனா வார்டில் 8 பேர் அனுமதி

இதைத் தொடர்ந்து, அவர்களைக் கண்டறிந்த சுகாதாரத் துறை அலுவலர்கள், 8 பேரையும் அரசு தலைமை மருத்துவமனையின் சிறப்புப்பிரிவு வார்டில் தனிமைப்படுத்தி சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அவர்களுக்குத் தீவிரப் பரிசோதனை நடைபெற்றுவருகிறது.

இதையும் படிங்க:'டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் தாமாக முன்வர வேண்டும்' - தமிழ்நாடு அரசு வேண்டுகொள்

ABOUT THE AUTHOR

...view details