தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கடலூரில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 893ஆக உயர்வு! - கரோனா தொற்று

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் இன்று (ஜூன் 23) ஒரே நாளில் 72 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 893ஆக உயர்ந்துள்ளது.

கரோனா பாதிப்பு: கடலுரில்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 893 ஆக உயர்வு!
Cuddalore new corona cases

By

Published : Jun 23, 2020, 7:59 PM IST

உலகை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸின் தாக்கம் தமிழ்நாட்டில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், போர்க்கால அடிப்படையில் ஜூன் 30ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு மீண்டும் அரசு பிறப்பித்துள்ளது. முகக் கவசம் அணிய வேண்டும், கிருமிநாசினி, தகுந்த இடைவெளி உள்ளிட்டவை பின்பற்றப்பட வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடலூரில் நேற்று (ஜூன் 22) வரை கரோனா தொற்றால் 821 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மேலும் 72 பேருக்கு கரோனா தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 893ஆக உயர்ந்துள்ளது.

பாதிக்கப்பட்ட அனைவரும் கடலூர், விருத்தாச்சலம், சிதம்பரம் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால், கடலூர் மாவட்டத்தில் நேற்று வரை 489 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், இன்று மேலும் 17 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details