தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கடலூரில் மேலும் 217 பேருக்கு கரோனா உறுதி! - கடலூர் கரோனா எண்ணிக்கை

கடலூர்: மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 217 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கரோனா பாதிப்பு: கடலூரில் இன்று ஒரே நாளில் 217 பேருக்கு கரோனா உறுதி!
Cuddalore corona cases

By

Published : Aug 6, 2020, 8:16 PM IST

கடலூரில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்துவருகிறது. மாவட்டத்தில் கரோனா தொற்றால் 410 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், இன்று மேலும் 217 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 227ஆக உயர்ந்துள்ளது. இதில், ஆயிரத்து 711 பேர் தனிமைப்படுத்தப்பட்டு, கடலூர், விருத்தாச்சலம், சிதம்பரம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், கடலூர் மாவட்டத்தில் நேற்று வரை 2 ஆயிரத்து 152 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், இன்று மேலும் 105 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், சிகிச்சை பலனின்றி 52 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இன்று மேலும் இரண்டு நபர்கள் உயிரிழந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details