தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோயம்பேட்டிலிருந்து கடலூர் சென்ற 107 பேருக்கு கரோனா! - கோயம்பேடு சந்தை

கடலூர்: கோயம்பேடு சந்தையிலிருந்து கடலூர் வந்த 107 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

கரோனா
கரோனா

By

Published : May 4, 2020, 2:04 PM IST

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிலிருந்து பிற மாவட்டங்களுக்கு சென்றவர்களால், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.

அந்த வகையில், கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து கடலூர் திரும்பிய 700 பேரை சுகாதாரத்துறையினர் தனிமைப்படுத்தியுள்ளனர். அவர்களை பரிசோதனை செய்ததில் 129 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து கடலூரில் இன்று மட்டும் 107 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் அம்மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 160 ஆக உயர்ந்துள்ளது. இவர்கள் கடலூர் அரசு மருத்துவமனை, சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, விருதாச்சலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இதையும் படிங்க:கோயம்பேடு சந்தைக்கு காய்கறி வாங்க சென்ற 11 பேருக்கு கரோனா!

ABOUT THE AUTHOR

...view details