தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மின்சாராம் தாக்கி பெண் உயிரிழப்பு! - கோவையில் மின்சாராம் தாக்கி பெண் உயிரிழப்பு

கோயம்புத்தூர்: உக்கடம் பகுதி அருகே துணி காய வைக்க போகும்போது மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார்.

மின்சாராம் தாக்கி பெண் உயிரிழப்பு
மின்சாராம் தாக்கி பெண் உயிரிழப்பு

By

Published : Apr 30, 2020, 11:14 AM IST

கோயம்புத்தூர் மாவட்டம் கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்தவர் அலாவுதீன். இவரது மனைவி ஜொகரா. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். கோட்டை மேடு பகுதியில் நேற்றிரவு பெய்த கனமழையின் காரணமாக மின் கம்பிகள் அறுந்து தொங்கியுள்ளது.

இந்நிலையில் ஜொகரா துணி காயப்போடும் கம்பியில் மின்சாராம் கசிந்துள்ளது. இதனையறியாமல் அவர் துணி காயப்போடும்போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.

இதனைக் கண்ட அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனக்கு கொண்டுசென்றனர். ஆனால், அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மின்வாரிய ஊழியர்கள், அங்கு மின் கம்பிகள் அறுந்து அதிலிருந்து மின்சாரம் கசிந்ததில்தான் பெண் உயிரிழந்தார் என்பதை உறுதி செய்தனர்.

சம்பவ இடத்தை ஆய்வு செய்யும் காவல் துறையினர்

பின்னர், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க:மின்னல் தாக்கி 2 பெண்கள் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details