தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கணவருடன் சேர்ந்து வாழ கூறிய பெற்றோர்- தற்கொலை செய்த பெண்! - covai crime news

கோவை: கணவருடன் சேர்ந்து வாழுமாறு பெற்றோர் கூறியதால் இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை
தற்கொலை

By

Published : Oct 4, 2020, 9:48 AM IST

கோவை கண்ணம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரேணுகா(20). இவருக்கும் கோபிசெட்டிப்பாளையத்தை சேர்ந்த வடிவேலுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. வடிவேல் வொர்க்‌ஷாப் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இதற்கிடையில் கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ரேணுகா கடந்த ஆறு மாதங்களாக அவரது பெற்றோர் விட்டில் இருந்துள்ளார். ரேணுகாவின் உறவினர்கள் மற்றும் பெற்றோர் அவரை சமாதானப்படுத்தி கணவருடன் வாழுமாறு அறிவுரை கூறியுள்ளனர்.

தொடர்ந்து கணவருடன் சமாதானமாக போக சொன்னதால், ரேணுகா மன அழுத்ததத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று(அக்.03) ரேணுகாவின் பெற்றோர் வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டு மாலை வீடு திரும்பினர். அப்போது ரேணுகா சானி பவுடர் குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனே அவரை மீட்டு சூலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ரேணுகா வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details