கோவை மாவட்டம் குறிச்சி பொங்காளியம்மன் கோயில் அருகிலுள்ள குளத்தில் அடையாளம் தெரியாத பெண் உடல் மிதந்து கிடப்பதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. உடனே அங்கு விரைந்த தீயணைப்பு துறையினர் பெண்ணின் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
குறிச்சியில் குளத்தில் மிதந்த பெண் உடல் மீட்பு - கோவை மாவட்டச் செய்திகள்
கோவை: குறிச்சியில் குளத்தில் மிதந்த அடையாளம் தெரியாத 55 வயதுடைய பெண் உடலை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.
![குறிச்சியில் குளத்தில் மிதந்த பெண் உடல் மீட்பு kovai](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6070585-thumbnail-3x2-l.jpg)
kovai
இறந்தவரின் விவரங்கள் தெரியாததால் காவல் துறையினர் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். குளத்தைத் சுற்றி அதிகமாக செடிகள், கொடிகள், முற்புதர்கள் மண்டி கிடப்பதால் நிறைய பேர் இப்படி மாட்டிக்கொள்கின்றனர் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
பெண் சடலம் மீட்பு
இதையும் படிங்க:குளத்தில் மூழ்கி கேரள மாணவர் உயிரிழப்பு: திருத்துறைப்பூண்டியில் பரிதாபம்