கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தில் ஆண்டுதோறும் மே மாதம் கோடைகால வன விலங்குகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறும். இந்த ஆண்டுக்கான கோடை கால வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி இன்று (மே.9) முதல் தொடங்கி ஆறு நாட்களுக்கு நடைபெறுகிறது.
பொள்ளாச்சி, வால்பாறை, மானாம்பள்ளி, உலாந்தி ஆகிய நான்கு வனச்சரகங்களில் இன்று (மே.9) கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது. நான்கு வனசரங்களில் அமைக்கப்பட்டுள்ள 62 நேர்கோட்டுப் பாதையில் 130-க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் வனப்பகுதிக்குள் குறைந்தபட்சம் ஐந்து கிலோ மீட்டர் அளவுக்கு சென்று அங்குள்ள மாமிச உண்ணி, தாவரம் உண்ணி விலங்குகளையும், அதேபோல் வனவிலங்குகள் எச்சம், கால்தடம் ஆகியவையும் கணக்கிடப்படுகிறது.