தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சோலையாறு அணையில் நீர் திறப்பு - தண்ணீர் திறப்பு

கோயம்புத்தூரில் பெய்து வரும் கனமழை காரணமாக சோலையாறு அணை முழு கொள்ளளவை எட்டியதால் இன்று (ஜூலை 24) நீர் திறக்கப்பட்டது.

முழு கொள்ளளவை எட்டிய சோலையாறு அணை
முழு கொள்ளளவை எட்டிய சோலையாறு அணை

By

Published : Jul 24, 2021, 1:55 PM IST

கோயம்புத்தூர்:வால்பாறையை அடுத்துள்ள சோலையாறு அணையானது ஆசியா கண்டத்தில் இரண்டாவது மிகப்பெரிய அணையாகும். இந்த அணையில் இன்று (ஜூலை 24) காலை 8 மணியளவில் நீர் திறக்கப்பட்டது.

தற்போது வால்பாறை பகுதியில் தென்மேற்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால். ஆறுகளில் வெள்ளப் பெருக்கெடுத்து தினந்தோறும் சோலையாறு அணையின் 5 அடி நீர்ப்பிடிப்பு உயர்ந்து வருகிறது.

முழு கொள்ளளவு எட்டிய சோலையாறு அணை

நேற்று (ஜூலை 23) காலை நிலவரப்படி 159 அடியை எட்டியிருந்த நிலையில் தற்போது பெய்த கனமழையின் காரணமாக 165 அடியான முழு கொள்ளளவு பூர்த்தியானது.

சோலையாறு அணை

இதனால், அப்பகுதியிலுள்ள பொதுமக்களுக்கு அபாய எச்சரிக்கை அறிவித்த பின்னர் அணையின் பாதுகாப்பு கருதி மூன்று மதகுகள் திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப்பட்டது. இதனை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கண்டு மகிழ்ந்தனர்.

இதையும் படிங்க: வேகமாக நிரம்பும் பவானிசாகர் அணை!

ABOUT THE AUTHOR

...view details