தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவையில் தனியார் பள்ளி மாணவன் தற்கொலை: ஆட்சியர் அலுவலகம் முற்றுகை - Private school student commits suicide in Coimbatore

கோவை: காரமடை பகுதியில் உள்ள வித்யா விகாஸ் பள்ளி விடுதியில் மாணவன் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் நியாயம் கேட்டு பெற்றோர், உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

கோவையில் தனியார் பள்ளி மாணவன் தற்கொலை
கோவையில் தனியார் பள்ளி மாணவன் தற்கொலை

By

Published : Dec 20, 2019, 10:24 PM IST


கோவை பாப்பம்பட்டி பிரிவைச் சேர்ந்த குமார்-சுமத்ரா தம்பதியின் மகன் ஷரிஷ். இவர் காரமடை பகுதியில் உள்ள வித்யா விகாஸ் தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்துவந்தார். இந்நிலையில் மாணவன் நேற்று மாலை பள்ளி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனையடுத்து பள்ளிக்குச் சென்ற பெற்றோர், உறவினர்கள் மாணவனின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


தொடர்ந்து, முறையான விசாரணை செய்யக்கோரி மாணவனின் பெற்றோர், உறவினர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

கோவையில் தனியார் பள்ளி மாணவன் தற்கொலை

அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய குமார், "ஹரிஷின் தற்கொலையில் எனக்குப் பெரும் சந்தேகம் உள்ளது. பள்ளி விடுதியில் ஷரிஷ் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட இடத்தில் ரத்தம் சொட்டிய நிலையில் இருந்தது. ஆகவே, ஷரிஷ் தற்கொலை குறித்து காவல் துறையினர் முறையான விசாரணை செய்ய வேண்டும். அதுவரை ஷரிஷின் உடலை வாங்க மாட்டோம்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கடலூரில் காவல் துணைஆய்வாளர் மகன் தூக்கிட்டு தற்கொலை!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details