தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வால்பாறையில் யானை தாக்கி தொழிலாளி உயிரிழப்பு - Valpari Elephant Attack Dead

கோவை: வால்பாறை அருகே காட்டு யானை தாக்கி தோட்டத் தொழிலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

valpari elephant attack வால்பாறையில் யானை தாக்கி பலி வால்பாறை யானை தாக்கி தொழிலாளி உயிரிழப்பு கோவை யானை தாக்கி தொழிலாளி உயிரிழப்பு Valpari Elephant Attack Valpari Elephant Attack Dead Kovai Elephant Attack Dead
Valpari Elephant Attack Dead

By

Published : Jan 14, 2020, 6:30 PM IST

கோவை மாவட்டம் வால்பாறைஅருகேயுள்ள டோனி முடி செகண்ட் டிவிஷன் பிரிவில் தோட்டத் தொழிலாளியாக பணிபுரிந்துவந்தவர் சுரேஷ். இவருக்கு திருமணமாகி மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், எஸ்டேட் பகுதியில் உள்ள மாரியம்மன் கோயில் பொங்கலை முன்னிட்டு ஊர் பொதுமக்கள், கோயில் நிர்வாகிகளுடன் சுரேஷ் திருவிழா பணியில் ஈடுபட்டிருந்தார்.

நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து சுரேஷ் வீடு திரும்ப சாலையில் நடந்து வந்த போது காட்டு யானை தாக்கி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வனத்துறை, காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்து சடலத்தை மீட்டு உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். மேலும், இப்பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே வரவேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். தொடர்ந்து காட்டுயானை நடமாட்டத்தை வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் கண்காணித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:

யானை போன்ற சிலையை உடைத்த காட்டு யானை!

ABOUT THE AUTHOR

...view details