கோவை மாவட்டத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மாநில அரசும், மாவட்ட நிர்வாகமும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இருப்பினும் கோவை மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இந்நிலையில் வால்பாறையில் கரோனா பரவல், அதிகரித்துவருவதால் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து வால்பாறை நகராட்சி ஆணையர் டாக்டர் பவுன்ராஜ் உத்தரவின் பேரில் முக்கிய பகுதிகளில் நகராட்சி மூலம் தூய்மை பணியாளர்கள், தன்னார்வலர்கள் மூலம் கிருமி நாசினி அடிக்கப்பட்டு வருகிறது.