கோயம்புத்தூர்: தனியார் விடுதி கூட்டரங்கில் மத்திய வருங்கால வைப்பு நிதி ஆணையத்தின் சார்பில் கருத்துக்கேட்பு மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய வருங்கால வைப்பு நிதி ஆணைய ஆணையாளர் நீலம் ஷமி ராவ் கலந்து கொண்டார்.
இந்த கூட்டத்தில், கோவைக்குட்பட்ட 13 மாவட்ட தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது சந்தேகங்களை முன்வைத்தனர்.
பயனுள்ள ஆலோசனை
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நீலம் ஷமி ராவ், "இந்தக் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் முன்வைத்த நிலையில் என்னென்ன திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்பது குறித்து பயனுள்ள ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளன.