தமிழ்நாடு

tamil nadu

கார் வெடிப்பில் முழு சதியையும் வெளிக்கொணர்ந்து மக்களின் அச்சத்தைப் போக்குக: மநீம

By

Published : Oct 26, 2022, 3:57 PM IST

கோவை கார் சிலிண்டர் வெடிப்பில் உள்ள முழு சதியையும் வெளிக் கொணர்ந்து மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் தங்கவேலு வலியுறுத்தியுள்ளார்.

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு  5 பேர் கைது
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு 5 பேர் கைது

கோவை கார் வெடிப்பு தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத்தலைவர் ஆர்.தங்கவேலு விடுத்துள்ள அறிக்கையில், 'கோவை உக்கடம் பகுதியில் கார் சிலிண்டர் வெடிப்புச்சம்பவத்தில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி வருவது மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் பலியானவரின் பின்னணியும், அவருடன் நெருக்கமாக இருந்தவர்கள் குறித்த தகவல்களும் பீதியூட்டும் வகையில் உள்ளன.

இதில் காவல் துறையினரின் விரைவான செயல்பாடுகளும், 5 பேரைக் கைது செய்துள்ளதும் பாராட்டுக்குரியவை. அதேசமயம், முழு சதியையும் கண்டுபிடித்து, சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பின்னணியில் வெளிநாட்டுத் தீவிரவாத கும்பல் இருக்கிறதா என்றும் தீர விசாரிக்க வேண்டும்.

1998-ல் தொடர் குண்டுவெடிப்பால் நிலைகுலைந்த கோவை, அதிலிருந்து மீண்டுவர பல ஆண்டுகளாகின. அமைதியையும், தொழில் நகரின் வளர்ச்சியையும் குலைக்க முயற்சிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். மக்கள் அச்சமின்றி வாழ்வதை உறுதிப்படுத்த தமிழ்நாடு அரசும், காவல் துறையும் தீவிர நடவடிக்கை எடுப்பது அவசியம்' என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க:"நச்சு அரசியல் சக்திகளுக்கு இடமளிக்கும் பேச்சுகளை தவிர்ப்போம்"- ஸ்டாலின்!

ABOUT THE AUTHOR

...view details