கோயம்புத்தூர்: சிங்காநல்லூரைச் சேர்ந்தவர் உமா கார்த்திகேயன் (56). பாஜக ஆதரவாளரான இவர், தனது ட்விட்டர் மற்றும் முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் உமா கார்க்கி என்ற பெயரில் செயல்பட்டு வருகிறார். இவர் சமூக வலைதளங்கள் வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் பெரியார் உள்ளிட்ட தலைவர்கள் குறித்து அவதூறான கருத்துகளை பதிவிட்டுள்ளதாக கோவை வடக்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகி ஹரீஷ் கோவை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில், அவதூறு பரப்புதல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், இரு மதத்தினர் இடையே மோதலை ஏற்படுத்த முயற்சித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சைபர் கிரைம் காவல் துறையினர் உமா கார்த்திகேயன் மீது வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து, அவரி கடந்த 20ஆம்தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், உமா கார்த்திகேயனை ஒரு நாள் காவலில் விசாரிக்க அனுமதி கேட்டு வியாழக்கிழமை சைபர் கிரைம் காவல் துறையினர், குற்றவியல் நடுவர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 4இல் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிபதி சரவணபாபு விசாரித்தார். அப்போது, அரசு சார்பில் வழக்கறிஞர் பிரசன்ன வெங்கடேஷ் வாதிட்டார்.
இதையும் படிங்க:நேற்று சிறந்த சமூக ஊடக செயற்பாட்டாளர் விருது; இன்று சைபர் கிரைம் போலீசாரால் கைது