கோயம்புத்தூர்: துடியலூரிலிருந்து கணுவாய் செல்லும் சாலையில் தனியார் சிப்ஸ் கடை உள்ளது. கடந்த 25ஆம் தேதி இரவு அங்குப் பணிபுரியும் ஊழியரின் இருசக்கர வாகனம் காணாமல்போனது. உடனே சிசிடிவி கேமரா பதிவை கடையின் உரிமையாளர் பார்த்துள்ளார்.
அதில் அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் கடையின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தைத் தள்ளிச் செல்வது பதிவாகியிருந்தது.