தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இரண்டு வார்டு; ஒரு வாக்குச்சாவடி - கால தாமதத்தால் வாக்களிக்க முடியாத வாக்காளர்கள்! - கோவை மாவட்டச் செய்திகள்

கோவை: கணியூர் ஊராட்சியில் இரண்டு வார்டுகளுக்கு ஒரே வாக்குச்சாவடி அமைக்கப்பட்டதால் கால தாமதம் ஏற்பட்டு பல வாக்காளர்கள் வாக்களிக்க முடியாமல் வீடு திரும்பினர்.

local body election
local body election

By

Published : Dec 30, 2019, 10:45 PM IST

கோவை மாவட்டம், சூலூர் ஒன்றியத்திற்குட்பட்ட கணியூர் ஊராட்சி ஊஞ்சப்பாளையத்தில் 11, 12 ஆகிய இரண்டு வார்டுகளுக்கும் ஒரே வாக்குச்சாவடி அமைக்கப்பட்டதால் வாக்காளர்கள் வாக்களிப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. இதனால் மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தும், பலர் வாக்களிக்காமல் வரிசையில் நின்றநிலையிலேயே இருந்தனர்.

கடைசி நேரத்தில் வாக்களிக்க வந்தவர்கள் கூட நீண்ட வரிசைகளைக் கண்டு திரும்பிச் சென்றனர். அதுமட்டுமல்லாமல் வாக்குப் பெட்டியை சரியாக மூடமுடியாமல் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அலுவலர்கள் திணறினர். இரண்டு வார்டுகளுக்கு ஒரு வாக்குச்சாவடி அமைத்ததால், டோக்கன் வழங்கப்பட்டும் வாக்களிக்க முடியவில்லை என வாக்காளர்கள் வருத்தம் தெரிவித்தனர்.

வாக்குச்சாவடி

இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தல் பதவிப் போட்டி: ஒட்டப்பிடாரத்தில் ஒருவர் வெட்டிக்கொலை 3 பேர் படுகாயம்!

ABOUT THE AUTHOR

...view details