தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 21, 2020, 7:39 PM IST

ETV Bharat / state

கோவையில் இன்று 648 பேருக்கு கரோனா!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் இன்று (செப்.21) 648 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.

கோயம்புத்தூர்
கோயம்புத்தூர்

தமிழ்நாட்டில் இன்று (செப்.21) 5 ஆயிரத்து 492 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.

இதன்மூலம் மாநிலம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 47 ஆயிரத்து 337ஆக அதிகரித்துள்ளது.

இதற்கிடையில் இன்று (செப்.21) கோவை மாவட்டத்தில் புதியதாக 648 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் கோவையில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 26,562 ஆக உயர்ந்துள்ளது.

ஏற்கனவே 21,699 பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில், சிகிச்சைப் பலனின்றி 385 பேர் உயிரிழந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details