தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

துணிக்கு இஸ்திரி போட்டு வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட அண்ணாமலை

கோவையில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டபோது துணிக்கு இஸ்திரி போட்டுக்கொடுத்து அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

By

Published : Feb 13, 2022, 5:05 PM IST

கோவையில் அண்ணாமலை வாக்கு சேகரிப்பு
கோவையில் அண்ணாமலை வாக்கு சேகரிப்பு

கோயம்புத்தூர்: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதையொட்டி அரசியல் கட்சியினர் தங்களது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிரப் பரப்புரையில் ஈடுபட்டுவருகின்றனர்.

கோவையில் அண்ணாமலை வாக்குச் சேகரிப்பு

இந்த நிலையில் இன்று (பிப்ரவரி 13) கோவை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை பரப்புரை மேற்கொண்டார்.

மத்திய அரசின் திட்டங்களைக் கூறி வாக்குச் சேகரித்தார். அப்போது, காமராஜபுரம் பகுதியில் உள்ள துணிச்சலவை மற்றும் இஸ்திரி செய்யும் கடை ஒன்றில் துணிக்கு இஸ்திரி போட்டு அண்ணாமலை வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டது அக்கட்சி தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: தடைசெய்யப்பட்ட ஏமனுக்குச் சென்றுவிட்டு சென்னை திரும்பியவர் கைது

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details